என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வாலிபர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்ரஹாரம் அருகே கூடலூர் மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்தவர் கணபதி. விவசாயி. இவருடைய மகன் பிரசாந்த் (வயது 20). இவர் கோவையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில், உடல் நலம் இல்லாமல் இருக்கும் தனது தந்தைக்கு மருந்து வாங்க, நண்பர் ராஜ் (19) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பிரசாந்த் கரந்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பிரசாந்த் ஓட்டினார். ராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.
கரந்தை சருக்கை பகுதியில் உள்ள சவேரியார் கோவில் தெரு அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரசாந்த் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்