என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை
    X

    குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் போலீசார் விசாரணை

    குழந்தைகளுடன் தாய் திடீரென மாயமானார். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

    திருப்புவனம்:

    திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது தவதாரேந்தல் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம். இவருடைய மனைவி அழகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் இரண்டு கைக்குழந்தைகளுடன் திருப்புவனம் சென்று விட்டு வருவதாகக் கூறிச் சென்ற அழகேஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து கணவன் பாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம், சப்- இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண் அழகேஸ்வரி மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×