search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் ஆசிரியை திடீர் மாயம்
    X

    மதுரையில் ஆசிரியை திடீர் மாயம்

    கோவிலுக்கு சென்ற ஆசிரியை திடீர் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள வி.மீனாட்சி புரத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகள் நித்யா (வயது23). இவர் ஆசிரியை பயிற்சி முடித்து இருக்கிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் சுந்தரி, சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நித்யாவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×