என் மலர்
செய்திகள்

கொடைக்கானலில் கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொடைக்கானலில் கஞ்சா விற்ற 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
கொடைக்கானல் மன்னவனூர் கண்ணன் புரத்தை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார் (வயது27), பாண்டியன்(37), அருண் பிரகாஷ்(23). இவர்கள் கஞ்சா கடத்தி வந்து கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளிடம் விற்பனை செய்து வந்துள்ளனர்.
கடந்த 21-ந்தேதி போலீசார் நடத்திய சோதனையின் போது கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அவர்கள் 3 பேரும் பிடிபட்டனர். 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. அடிக்கடி கஞ்சா விற்று வருவதால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story