என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை முயற்சி: அதிகாரிகள் சிக்குகிறார்கள்

சென்னை:
எழும்பூர், நரியங்காடு குடியிருப்பில் வசித்து வருபவர் இந்துமதி (27). ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை இந்துமதி. அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயக்க நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயர் அதிகாரிகள் தனது அழகை வர்ணித்து செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், பணி மாறுதல் கேட்டும் கொடுக்க மறுக்கின்றனர் என்றும் இந்துமதி குற்றம் சாட்டி இருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்து மதிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த அதிகாரிகள் பற்றிய விபரங்களை தனிப்படையினர் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள்.
எனவே செக்ஸ் தொல்லை கொடுத்த அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
