என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே கணவர் திடீர் மாயம்: மனைவி போலீசில் புகார்
குத்தாலம் அருகே கணவர் திடீரென மாயமானது குறித்து அரவது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே பேராவூரை சேர்ந்தவர் அலெக்சாண்டர் மகன் சுந்தர் (வயது24). அதே தெருவை சேர்ந்தவர் சிவப்ரியா(20). இருவரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு குத்தாலத்தில் உள்ள இஸ்மாயில் காலனியில் குடியிருந்து வந்தனர். இந்லையில் கடந்த 12-ந்தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற சுந்தர் பின்னர் வீடு திரும்பவில்லையாம்.
கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவப்ரியா இதுகுறித்து குத்தாலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுந்தரை தேடிவருகிறார்.
Next Story






