என் மலர்
செய்திகள்

வேதாரண்யத்தில் தூக்குபோட்டு மீனவர் தற்கொலை
வேதாரண்யத்தில் மது குடிக்கும் பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தூக்குபோட்டு மீனவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக் குட்பட்ட ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் (40). மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மது குடிக்கும் பழக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது அருந்தியதால் அவரை மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. பிறகு கடைக்கு பொருள்கள் வாங்க ஞானசேகரன் மனைவி நாகலெட்சுமி சென்று விட்டார். பின்பு வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஞானசேகரன் தூக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து நாகலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story






