என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் பிரதமரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    பண்ருட்டியில் பிரதமரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை வாபஸ் பெற கோரி பண்ருட்டியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பண்ருட்டி, நவ. 21-

    பிரதமர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை வாபஸ் பெற கோரி பண்ருட்டியில் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பண்ருட்டி நகர காங்கிரஸ் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி.கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வல்லம் ராஜன், முன்னாள் நகர மன்ற துணைதலைவர் கோதண்டபாணி, நெல்லிக்குப்பம் நகர தலைவர் திலகர், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் மணி, மாவட்ட துணை தலைவர்கள் மெகபுக்கான், ‌ஷபி, மாவட்ட செயலாளர் ஐ.கே.மூர்த்தி, முன்னாள் நகர காங்கிரஸ் பொது செயலாளர் நாகராஜன், நகர காங்கிரஸ் செயலாளர் ரவி, வட்டார தலைவர்கள் தருமசிவம், குணசேகரன், புதுப்பேட்டை நகர தலைவர் குமாரசாமி மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
    Next Story
    ×