என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம்-கேமிரா கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் பென்னாலூரில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.
நேற்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். இன்று காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக ரமேசுக்கு தகவல் வந்தது.
உடனே இவர் டாஸ்மாக் கடைக்கு சென்று பார்த்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம், ரூ.1000 மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை போய் இருந்தது.
மேலும் அருகில் உள்ள டாஸ்மாக் பார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டி.வி. ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
நேற்று டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.2½ லட் சத்தை ஒரு காலி அட்டை பெட்டியில் வைத்து இருந்ததால் அது கொள்ளையர்கள் கண்ணில் சிக்காமல் தப்பியது
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






