என் மலர்
செய்திகள்

சிவகங்கை அருகே இளம்பெண் தற்கொலை
சிவகங்கை அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த வர் பிச்சையா (வயது 55). இவரது மகள் காஞ்சனா தேவி (16). இவர் கடந்த சில நாட்களாக யாருடனும் சரியாக பேசாமல் விரக்தியுடன் காணப்பட்டார்.
இந்நிலையில சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த காஞ்சனாதேவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காஞ்சனாதேவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பிச்சையா எஸ்.வி.மங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பொன்ரகு வழக்குப்பதிவு செய்து காஞ்சனா தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






