என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![புதுக்கோட்டை அருகே பஸ் நிலையத்தில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு புதுக்கோட்டை அருகே பஸ் நிலையத்தில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு](https://img.maalaimalar.com/Articles/2016/Nov/201611202233277283_pudukkottai-near-bus-stand-male-baby-rescue_SECVPF.gif)
புதுக்கோட்டை அருகே பஸ் நிலையத்தில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூர் விலக்கு சாலை பேருந்து நிலையத்தில் துணிப்பை ஒன்று கிடந்தது . அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்குநின்ற பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது, துணிப்பையில் சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அந்த குழந்தையை அங்கு போட்டு விட்டு சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை. தகாத உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை அங்கு போட்டு சென்றாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)