என் மலர்
செய்திகள்

மானாமதுரை அருகே 2 பெண்கள் மாயம்
சிவகங்கை:
மானாமதுரை அருகே உள்ள மலைக்குளத்தை சேர்ந்தவர் ரவி (வயது25). இவரது மனைவி சண்முகப் பிரியா (வயது19). கடந்த 12-ந்தேதி உறவினர் வீட்டிற்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அதே நேரம் வீட்டிற்கும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் சண்முகப்பிரியாவை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது.
மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் இருளாயி. இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வாரத்தில் இருளாயி, பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். கடந்த 6-ந்தேதி வீட்டில் இருந்து உறவினரை பார்த்து வருவதாக கூறி வெளியே சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முகமது பரக்கத்துல்லா வழக்குப் பதிவு செய்து மாயமான 2 பெண்களையும் தேடி வருகிறார்.






