என் மலர்

    செய்திகள்

    அரியலூர், விளாங்குடியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூர், விளாங்குடியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரியலூர், விளாங்குடியில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர் அண்ணா சிலை முன்பு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் கட்டப்பா முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் புலிகேசி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததால் விவசாய கடன் தவணை காலத்தை அதிகரிக்க வேண்டும். சங்கங்களில் இருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க வேண்டும். பயிர் பாதுகாப்பு திட்ட காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். சுபகாரியங்களுக்கு வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க உண்மை தன்மை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 544 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் செயல்பட உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ராஜேந்திரன், குமார், சோலைமுத்து, வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே விளாங்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதில், 500, 1,000 ரூபாய் நோட்டுக்கான கெடு தேதிக்குள், விவசாய வட்டியில்லா கடன்கள், விவசாய வட்டியில்லா நகை கடன்கள், குழு கடன்கள் செலுத்துவதற்கும், உரம் வினியோகம் செய்வதற்கும் பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த போராட்டத்தில், மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் புலிகேசி, பொருளாளர் கிட்டப்பா, போராட்டக்குழு தலைவர் சேகர், மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், குமார், இணை செயலாளர்கள் சோலைமுத்து, வேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×