என் மலர்

    செய்திகள்

    புள்ளம்பாடி அருகே குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை?
    X

    புள்ளம்பாடி அருகே குடும்ப தகராறில் கணவன் அடித்துக் கொலை?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்சி புள்ளம்பாடி அருகே குடும்ப தகராறில் கணவன் வீட்டில் இறந்த கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து இது கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஓரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது43) விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்பவரை திருமணம் செய்தார் திருமணம் ஆகி சில வருடங்களிலேயே செல்வி இறந்து விட்டார்.

    பின்னர் அவர் திம்மூர் கிராமத்தை சேர்ந்த மாரியாயி (35) என்பவரை15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அஜித்குமார் (15) அனுசியா (13) என 2 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு ஆறுமுகத்திற்கும் மாரியாயிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணி அளவில் மாரியாயி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இது குறித்து அறிந்த அவரது அண்ணன் மருதமுத்து வீட் டிற்கு சென்று கதவை திறந்து பார்த்துள்ளார்.

    அப்போது ஆறுமுகம் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து இது கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×