என் மலர்
செய்திகள்

அறந்தாங்கியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
அறந்தாங்கியில் குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள சித்திரவிடங்கனைச் சேர்ந்தவர் லெட்சுமணன்.(வயது39). இவர்மீது அறந்தாங்கி போலீஸ் நிலையம் உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் லெட்சுமணன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், மாவட்ட கலெக்டர் கணேஷிற்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று லெட்சுமணனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து லெட்சுமணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள சித்திரவிடங்கனைச் சேர்ந்தவர் லெட்சுமணன்.(வயது39). இவர்மீது அறந்தாங்கி போலீஸ் நிலையம் உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் லெட்சுமணன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், மாவட்ட கலெக்டர் கணேஷிற்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று லெட்சுமணனை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து லெட்சுமணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story






