என் மலர்
செய்திகள்

சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சீர்காழி உழவர்சந்தை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரூ.500, 1000 செல்லாது என அறிவித்ததை கண்டித்தும், வங்கிகளில் பணம் எடுப்பவர்களிடம் கைவிரலில் மை வைக்கும் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சீர்காழி:
சீர்காழி உழவர்சந்தை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரூ.500, 1000 செல்லாது என அறிவித்ததை கண்டித்தும், வங்கிகளில் பணம் எடுப்பவர்களிடம் கைவிரலில் மை வைக்கும் முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.வட்டக்குழு உறுப்பினர்கள் நாகையா, ராஜாராமன், பாலு, கேசவன், ஜோதிலிங்கம் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக வட்டக்குழு உறுப்பினர் விஜய் வரவேற்று பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன் கண்டன உரையாற்றினார். முடிவில் வட்டக்குழு உறுப்பினர் புஷ்பலதா நன்றி கூறினார்.
Next Story






