என் மலர்
செய்திகள்

அரிமளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
அரிமளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.
அரிமளம்:
அரிமளம் அருகே உள்ள தெற்கு நல்லிப்பட்டி சேர்ந்தவர் ஜெம்புலிங்கம். இவரது மனைவி மீனாட்சி (வயது 70). இவர் சொந்தவேலை காரணமாக நேற்று முன்தினம் கே.புதுப்பட்டி கடைவீதிக்கு சென்றார்.
பின்னர் அவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக புதுவயல் அருகே உள்ள கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சக்திவேல் (18) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் எதிர்பாரத விதமாக சக்திவேல் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீனாட்சி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மீனாட்சியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம் அருகே உள்ள தெற்கு நல்லிப்பட்டி சேர்ந்தவர் ஜெம்புலிங்கம். இவரது மனைவி மீனாட்சி (வயது 70). இவர் சொந்தவேலை காரணமாக நேற்று முன்தினம் கே.புதுப்பட்டி கடைவீதிக்கு சென்றார்.
பின்னர் அவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக புதுவயல் அருகே உள்ள கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் சக்திவேல் (18) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த நிலையில் எதிர்பாரத விதமாக சக்திவேல் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீனாட்சி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மீனாட்சியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






