என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மது குடிக்க பணம் தராத தந்தைக்கு அரிவாள் வெட்டு
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் பராசக்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 66). இவரது மகன் கணேசன் (28). இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் கணேசன் வேலைக்கு செல்லாமல் தனது தந்தையிடம் பணம் வாங்கி செலவழித்து வந்தார்.
சம்பவத்தன்று மது குடிக்க பணம் கேட்டார். சின்ராஜ் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த கணேசன் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை வாகம்புளி தெருவைச் சேர்ந்த சுல்தான் மகன் ஜாகீர் உசேன் (25). இவர் சம்பவத்தன்று கடை வீதி பகுதியில் நடந்து வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26), சதாம் உசேன் (24) ஆகிய 2 பேரும் மது குடிக்க பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர். தென்கரை போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்