என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 464 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் சரிந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று மேட்டூர் அணைக்கு 193 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 464 கன அடியாக உயர்ந்தது. நேற்று 40.88 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 40.86 அடியானது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு 464 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இனி வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்து நீர்வரத்து மேலும் அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்