என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முத்துப்பேட்டையில் பள்ளி மாணவர்கள் திடீர் மோதல்: 5 பேர் கைது
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவர் சூர்யா தனது சைக்கிளை அங்குள்ள ஸ்டாண்டில் நிறுத்தியுள்ளார். அதன் கேரியரை சில மாணவர்கள் கழட்டியுள்ளனர்.
இதுபற்றி சூர்யா பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியிடம் கூறினார். இதைதொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டித்துள்ளார். மேலும் இதுபோல் நடந்து கொள்ளமாட்டோம் என எழுதி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதேபள்ளியில் படிக்கும் 6 மாணவர்கள் சூர்யாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனை தட்டிகேட்ட பிளஸ்-2 மாணவர்களான கமலேஸ்வரன். சுதர்சன் ஆகியோரை 6 மாணவர்களும் தாக்கியுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த 2 பேரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிமுத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து 2 மாணவர்களை தாக்கிய 5 மாணவர்களை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்