என் மலர்
செய்திகள்

பயிருக்கு போதிய தண்ணீர் இல்லாததால் வயலில் மயங்கி விழுந்து விவசாயி பலி
பயிர்கள் கருகும் அதிர்ச்சியில் விவசாயி வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள சேமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணிசாமி (62) விவசாயி.
இவருக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சம்பா பயிர் சாகுபடி செய்து இருந்தார். நாற்று விட்டு 42 நாட்கள் ஆகிய நிலையிலும் பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அந்தோணிசாமி திடீரென அவர் வயலில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து கீழ்வேளூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வயலில் மயங்கி விழுந்து இறந்த அந்தோணிசாமிக்கு பிலோமினாள் என்ற மனைவியும், விக்டோரியா ராணி, வினோதினி ராணி, விண்ணரசி ராணி ஆகிய 3 மகள்களும் வின்செண்ட் என்ற மகனும் உள்ளனர்.
Next Story






