என் மலர்
செய்திகள்

கமிஷன் பெற்று கருப்பு பணம் மாற்றப்படுகிறதா?: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கமிஷன் பெற்று கருப்பு பணம் மாற்றப்படுகிறதா என்பதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய நாட்டை மேம்படுத்தி, ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து உள்ளார். மக்களின் வசதிக்காக நாடு முழுவதும் 18-ந் தேதி வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து விட்டு வந்து உள்ளேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இந்த தொகுதிகளில் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. இதை தேர்தல் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரவக்குறிச்சியில் சென்றமுறை தேர்தலை ரத்து செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
கடந்த 1978-ம் ஆண்டும் பணம் செல்லாது என்ற நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அந்த நடவடிக்கை தோற்று போயிருக்கிறது. அதுபோன்ற தோல்வி வரக்கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்கின்றனர்.
சிறிது சிரமங்கள் இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இதற்காக வேதனைப்படுகிறோம். தற்காலிகமாக ஏற்படும் இந்த கஷ்டம் தங்கள் வாழ்நாளில் நிரந்தரமாக ஒளியேற்றும் என மக்கள் நம்புகிறார்கள். கமிஷன் பெற்று கருப்பு பணம் மாற்றப்படுகிறது என்பது பற்றிய தகவல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
பா.ஜனதா எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பேசுவதால் அவர் எங்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறுகிறாரா? அல்லது காங்கிரஸ் தனது நிலையில் இருந்து கீழே இறங்கி செல்கிறதா? என காங்கிரஸ் தலைவர்களுக்கு குஷ்பு விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.
மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் வங்கி முன் நிற்கவில்லை என்பதற்காக மற்றவர்களை ஒப்பிடக்கூடாது. ஜல்லிக்கட்டு நடத்த மு.க.ஸ்டாலினை விட அதிகமான முயற்சியில் நான் ஈடுபட்டு கொண்டு இருக்கிறேன். அதேசமயம் அவர் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய நாட்டை மேம்படுத்தி, ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து உள்ளார். மக்களின் வசதிக்காக நாடு முழுவதும் 18-ந் தேதி வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து விட்டு வந்து உள்ளேன். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இந்த தொகுதிகளில் சர்வசாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. இதை தேர்தல் அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரவக்குறிச்சியில் சென்றமுறை தேர்தலை ரத்து செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
கடந்த 1978-ம் ஆண்டும் பணம் செல்லாது என்ற நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். அந்த நடவடிக்கை தோற்று போயிருக்கிறது. அதுபோன்ற தோல்வி வரக்கூடாது என்பதற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்கின்றனர்.
சிறிது சிரமங்கள் இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இதற்காக வேதனைப்படுகிறோம். தற்காலிகமாக ஏற்படும் இந்த கஷ்டம் தங்கள் வாழ்நாளில் நிரந்தரமாக ஒளியேற்றும் என மக்கள் நம்புகிறார்கள். கமிஷன் பெற்று கருப்பு பணம் மாற்றப்படுகிறது என்பது பற்றிய தகவல் அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
பா.ஜனதா எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பேசுவதால் அவர் எங்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறுகிறாரா? அல்லது காங்கிரஸ் தனது நிலையில் இருந்து கீழே இறங்கி செல்கிறதா? என காங்கிரஸ் தலைவர்களுக்கு குஷ்பு விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.
மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் வங்கி முன் நிற்கவில்லை என்பதற்காக மற்றவர்களை ஒப்பிடக்கூடாது. ஜல்லிக்கட்டு நடத்த மு.க.ஸ்டாலினை விட அதிகமான முயற்சியில் நான் ஈடுபட்டு கொண்டு இருக்கிறேன். அதேசமயம் அவர் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் இதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






