search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் ரெயில்வே கேட் 16-ந்தேதி முதல் மூடப்படுகிறது
    X

    அரியலூரில் ரெயில்வே கேட் 16-ந்தேதி முதல் மூடப்படுகிறது

    வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூரில் பெரம்பலூர் சாலையில் ரெயில்வே கேட் (எண் 201) உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இங்கு ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய பைபாஸ் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு விட்டதால், நகரில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வாய்ப்பில்லை என்று ரெயில்வே நிர்வாகம் முதலில் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலை துறையினர் ரெயில்வே கேட் அருகில் மண் ஆய்வு செய்தனர். அங்கு மேம்பாலம் கட்ட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) முதல் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற அறிவிப்பை வெளியிட்டு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர், திட்டக்குடி, கொளங்காநத்தம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்தில் இருந்து புறவழிச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள் அரியலூர் அண்ணா நகர் வழியாக பைபாஸ் சாலைக்கு செல்லும் வகையில் புதிய சாலை போடப்பட்டுள்ளது.

    ரெயில்வே கேட் அருகேயுள்ள மயானத்திற்கு இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கான வழியை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×