என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவகோட்டை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
    X

    தேவகோட்டை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

    தேவகோட்டை அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாய மானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிவகங்கை:

    தேவகோட்டை தாலுகா சாதிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் பிரியா (வயது21). இவர் தேவகோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற பிரியா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதட்டமான முனியசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்துசாமி கொடுத்த புகாரின்பேரில் தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து, பிரியா தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×