என் மலர்
செய்திகள்

ஜெராக்ஸ் கடைக்காரரை மிரட்டிய வாலிபர் கைது
வேதாரண்யம் அருகே ஜெராக்ஸ் கடைக்காரரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், வடமழை மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (55). இவர் சம்பவத்தன்று கடையை மூடிய போது அதே பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் இளையராஜா (22) என்பவர் ஜெராக்ஸ் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.
கடையை சாத்திவிட்டதால் தற்போது எடுக்க முடியாது என சொல்லியுள்ளார். மறுநாள் காலை சந்திரசேகரன் கடையை திறக்கும் போது இளையராஜா அங்கு சென்று தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து சந்திரசேகரன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர்.
Next Story