search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு
    X

    சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

    சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சூலூர் காடம் பாடியில் வசிப்பவர் ஜோசப் என்பவரின் மகன் பிஜோ (வயது32). அலங்கார வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான கேராளவுக்கு சென்றார். பின்னர் நேற்று வீட்டுக்கு வந்துபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×