என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்புவனத்தில் பெண்ணை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்தவர் கைது
    X

    திருப்புவனத்தில் பெண்ணை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்தவர் கைது

    பெண்ணை காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசின் புதுவாழ்வு மைய அலுவலகம் உள்ளது. இங்கு வேலை பார்ப்பவர் பிரிய தர்ஷினி (வயது26). இவர் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அதில் என்னுடன் வேலை பார்க்கும் முத்துக்கிருஷ்ணன் (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இந்த நிலையில் அவர் திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து மானாமதுரை துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் விசாரணை நடத்தி முத்துக்கிருஷ்ணனை கைது செய்தார். மேலும் அவரது பெற்றோர் மூக்கன்- நாகவள்ளி, உறவினர்கள் மகேஸ்வரி, சுதா, தேவராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×