என் மலர்
செய்திகள்

விவசாயிகள் நவீன வசதிகளை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெற வேண்டும்: கலெக்டர் பேச்சு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் அதிகமான நீர்நிலைகள் உள்ள பகுதியாகும். முறையாக நீர்நிலைகளை பாரமரித்தால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர வாய்ப்புள்ளது. நீர்நிலைகளில் வரத்து கால்வாய் மற்றும் நீர் வெளியேற்றும் வழிதடங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். அதை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
மேலும் விவசாயிகள் காலமாற்றத்திற்கு ஏற்ப நவீன வசதிகளை பயன்படுத்தி விவசாய முறையினை மாற்றி கொள்ள வேண்டும். நீர் பற்றாக் குறையாக உள்ளதால் சொட்டு நீர்பாசனத்திட்டம், நுண்ணூயிர் பாசனத் திட்டம் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்து விவசாயத்தை செம்மையாக பயன்படுத்தினால் அதிக மகசூல் என்ற இலக்கை எட்டமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, வேளாண்மை இணை இயக்குநர் செல்வம், வேளாண்மை துணை இயக்குநர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மதியழகன் (பொது), தர்சன் (வேளாண்மை), தோட்டக் கலை துணை இயக்குநர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






