என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டையில் ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திலகர் திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர் இரா.வீரசர்வேஸ்வரன் தலைமை வகித்தார்.
வட்டாரச் செயலாளர் ஆ.முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அ.விமலா சொரூபராணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.சுசிலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் க.இளையஞாயிறு, பொ.முத்து, ம.கர்ணன், செ.உமாராணி ஆகியோர் ஆர்பாட்டத்தில் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் ஆ.தவமணி சிறப்புரை ஆற்றினார். முடிவில் வட்டாரப் பொருளாளர் அ.பிரான்சிஸ் சேவியர் நன்றியுரை கூறினார்.
ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் 6வது ஊதியக்குழு ஊதியத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை நீக்கி சரி செய்திட வேண்டும். பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்திட வேண்டும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வரைவு முன்மொழிவில் ஏற்படவிருக்கும் பாதிப்புக்களை அறவே நீக்கிட வேண்டும். மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள 7வது ஊதியக்குழு ஊதியத்தை தமிழகத்தில் உடனே அமுல்படுத்திட ஊதியக்குழு அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் துணைத் தலைவர்கள் சி.குமாரவேலு, ச.நடராஜன், க.மாலதி, வட்டாரத் துணைச் செயலாளர்கள் த.சரவணன், மா.மல்லிகா மற்றும் வட்டாரச் செயற்குழு உறுப்பினர்கள் செ.முனியாண்டி, சி.இளங்கோ, ஆ.ஆனந்தன், சு.இளங்கோ, சு.சரவணன், த.சூர்யகலா, இரா.நிர்மலா, செ.எலிசபெத்ராணி, ம.மணிமேகலை, ம.நாகலெட்சுமி, செ.மார்க்ரேட் அல்போன்ஸ்மேரி, இ.சுசிலாராணி, சி.மனோரஞ்சிதம், க.உமா, சி.தர்ஷினி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






