என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் கொள்ளை
    X

    பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் கொள்ளை

    பீர்க்கன்கரணையில் தலைமை செயலக ஊழியர் வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    தாம்பரம்:

    பீர்க்கன்கரணையில் வசித்து வருபவர் அரிராமகிருஷ்ணன். தலைமை செயலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கினார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அரிராமகிருஷ்ணன் வீட்டு கதவை உடைத்து ரூ.6 ஆயிரம், 5 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டது. இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×