என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே மாணவி உள்பட 2 பேர் மாயம்
காரைக்குடி அருகே மாணவி உள்பட 2 பேரை காணவில்லை. போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
காரைக்குடி மீனாட்சி நகரை சேர்ந்தவர் மிக்கேல்ராஜ். இவரது மகள் ஜான்சி (வயது18). இவர் காரைக்குடியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற ஜான்சி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து தாய் ராஜேஸ்வரி வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்.
இதேபோல தேவகோட்டை பெரியகருப்பு தெருவைச் சேர்ந்த சுரேஷ் பாபு மகள் பிரியங்கா (21). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். நேற்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து தேவகோட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Next Story






