என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே மாங்காய் திருடிய 2 பேர் கைது
வேதாரண்யம் அருகே மாங்காய் திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் தெற்குகாடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த தோப்பில் ஆயக்காரன்புலம்-3 பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் அசோகன் (26), பன்னாள் மேற்கு பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் செல்வகுமார் (29) ஆகிய இருவரும் சுமார் 25 கிலோ மதிப்புள்ள மாங்காய்களை திருடி சென்றனர்.
இதுகுறித்து தோப்பில் வேலை பார்த்த கருப்பம்புலம் நடுகாட்டைச் சேர்ந்த சுப்பையன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அசோகன் (எ) அசங்கன், செல்வகுமார் ஆகிய இருவரையும் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தார்.
Next Story






