என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரோம்பேட்டை மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது
    X

    குரோம்பேட்டை மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது

    குரோம்பேட்டை மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    தாம்பரம்:

    கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்றது. டிரைவர் நாயக்பாட்சா வண்டியை ஓட்டினார். பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    அதிகாலை 3 மணியளவில் குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் டிரைவர் நாயக் பாட்சா, நடத்துனர் விஜயகுமார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் பல்லாவரம்-தாம்பரம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×