என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பேர் படுகாயம்
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி சேர்வ ராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் அசோக்குமார் (வயது 18). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர்களான ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் மகன் ராஜா (23), வேல்முருகன் மகன் கார்த்தி (22) ஆகியோருடன் நேற்று இரவு சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நெல்லித்தோப்பு டாஸ்மாக் கடை அருகே சென்றுகொண்டிருந்தபோது அதே வழியில் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அசோக்குமார், ராஜா, கார்த்திக் ஆகியோர் பலத்த அடிப்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அசோக்குமார் மீன்சுருட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி விசாரித்து வருகின்றனர்.






