என் மலர்
செய்திகள்

நாகை அருகே பெயிண்டர் தற்கொலை
நாகை அருகே பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த கீவளூர் போலீஸ் சரகம் பட்டமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 42). இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக மனஅழுத்த நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு மன அழுத்த நோய் அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டுள்ளார்.
அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீவளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






