என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே கோவிலுக்குள் தீக்குளித்து இளம்பெண் பலி
காரைக்குடி அருகே கோவிலுக்குள் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளிக்கண்ணு (வயது29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
நேற்று மாலை கொத்தமங்கலத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் வந்த வள்ளிக்கண்ணு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தை செட்டிநாடு போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில், வள்ளிக்கண்ணு குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வள்ளிக்கண்ணு (வயது29). இவர்களுக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
நேற்று மாலை கொத்தமங்கலத்தில் உள்ள அம்மன் கோவிலுக்குள் வந்த வள்ளிக்கண்ணு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தை செட்டிநாடு போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் கூறுகையில், வள்ளிக்கண்ணு குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story






