என் மலர்
செய்திகள்

சீர்காழியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் கைது
சீர்காழியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே அகணி கிராமத்தில் வசிப்பவர் லோகநாதன் இவரது மகன் ஆனந்தன்(22).இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு அப்பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் நடந்த ஒரு விழாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7வயது சிறுமி தனது பெற்றோருடன் வந்துள்ளார்.அப்போது ஆனந்தன் அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுத்துரை வழக்குபதிவு செய்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






