என் மலர்
செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே தீ விபத்தில் மூதாட்டி பலி
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள செட்டி குட்டை என்ற இடத்தில் சிலர் குடிசை போட்டு வசித்து வருகிறார்கள். இந்த குடிசைகளில் நேற்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது.
இந்த தீ மள மள என்று பரவி அருகே இருந்த மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இந்த தீவிபத்தில் பெரியசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் மற்றும் இருளாயி ஆகியோரின் குடிசை எரிந்து சாம்பலானது.
இந்த தீ விபத்தின் போது வீட்டுக்குள் இருளாயி (வயது 80) தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இவரது குடிசை வீட்டின் மேல் கூரை எரிந்து இருளாயி மீது விழுந்தது. இதனால் அதே இடத்தில் அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.
இந்த தீ விபத்தில் வீடுகளிலும் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் 8 பவுன் எரிந்து நாசமானது. மேலும் டி.வி. பிரிட்ஜ். ரேசன் கார்டுகள் மற்றும் பல்வேறு பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
சம்பவ இடத்துக்கு அந்தியூர் மற்றும் பவானி தீயணைப்புபடையினர் விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.






