என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே லெவல்கிராசிங் கேட்டை உடைத்து சென்ற லாரி
    X

    மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே லெவல்கிராசிங் கேட்டை உடைத்து சென்ற லாரி

    மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே லெவல்கிராசிங் கேட்டை உடைத்து சென்ற லாரியால் ரெயில் தாமதமாக சென்றது.
    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் ரெயில்வே லெவல் கிராசிங்கேட் உள்ளது. மேல்மருவத்தூரில் இருந்து இந்த வழியாக செய்யூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயில்வே கேட்டில் ரெயில் வருகைக்காக லாரி நிறுத்தப்பட்டிருந்தது. ரெயில் சென்ற பிறகு ரெயில்வே கேட்டை தூக்கும் பணியில் ஊழியர் ஈடுபட்டிருந்தார். கேட்டை தூக்கும் முன்பே லாரி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் லாரி மோதியதில் லெவல்கிராசிங் கேட் உடைந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கேட்டை மூட முடியாததால் ரெயில் சிக்னல் கிடைக்காமல் அங்கேயே நின்றது. இதையடுத்து அங்கு ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில்வே கேட்டின் இருபுறமும் நின்று போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் ரெயிலை அனுப்பி வைத்தனர்.

    இதனால் ரெயில் தாமதமாக சென்றது. அதேபோல் சென்னையில் இருந்து விழுப்புரம சென்ற மின்சார ரெயில்களையும் அதேபோல அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
    Next Story
    ×