என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலி
    X

    அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் பலி

    திடீரென பிரேக் போட்டதால் அரசு பஸ்சில் இருந்து கீழே விழுந்த கண்டக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    செங்கல்பட்டு:

    உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கல்பாக்கம் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று கல்பாக்கத்தில் இருந்து வேலூர் சென்ற அரசு பஸ்சில் சென்றார். செங்கல்பட்டு பாலூரை அடுத்த மேளச்சேரியில் பஸ் சென்று கொண்டிருந்த போது ஒருவர் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது படிக்கட்டு ஓரம் நின்றிருந்த கண்டக்டர் குமார் நிலை தடுமாறி பஸ்சில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் பஸ்சில் மோதி படுகாயம் அடைந்த அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். பலியான குமாருக்கு கலைவாணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    Next Story
    ×