search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    அரியானா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.

    இதை கண்டித்து ஈரோடு ஜவான் பவன் முன்பு காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்த்தில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்கள் சரவணன், காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், மண்டல தலைவர் ஜாபர் சாதிக், பாட்சா, பவானி வட்டார தலைவர் பூபதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×