என் மலர்
செய்திகள்

மாமல்லபுரத்தில் ஆட்டோ டிரைவர் கடத்தலா?: போலீஸ் விசாரணை
மாமல்லபுரத்தில் ஆட்டோ டிரைவர் கடத்தப்பட்டரா என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று மதியம் மாமல்லபுரம் கோவளம் சாலையில் ஆட்டோவுடன் பயணிகளுக்காக காத்து இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயக்குமாரை மிரட்டினர். பின்னர் அவரை தங்களது பைக்கில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் சோதனைச்சாவடி மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு ஜெயக்குமார் பதட்டத்துடன் வந்ததார். அவர் போலீசாரிடம் கூறும் போது, கண்ணையும் வாயையும் கட்டி பைக்கில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
போலீசார் உஷாராவது தெரிந்ததும் பூஞ்சேரியில் கொண்டுவந்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் யார்? எதற்காக என்னை கடத்தினார்கள் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.
ஜெயக்குமார் முண்ணுக்கு பின் முரணாக சந்தேகத்திற்கிடமாக தகவல் தெரிவித்து வருவதால் அவர் மீதும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் விவகாரம் அல்லது கடன் பிரச்சனை ஏதும் உள்ளதா? கடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் மாமல்லபுரம் கோவளம் சாலை பரபரப்பாக காணப்பட்டது.
மாமல்லபுரத்தை அடுத்த தேவநேரியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஷேர் ஆட்டோ டிரைவர். நேற்று மதியம் மாமல்லபுரம் கோவளம் சாலையில் ஆட்டோவுடன் பயணிகளுக்காக காத்து இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ஜெயக்குமாரை மிரட்டினர். பின்னர் அவரை தங்களது பைக்கில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் சோதனைச்சாவடி மற்றும் காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் மாலை 5 மணிக்கு மாமல்லபுரம் காவல் நிலையத்துக்கு ஜெயக்குமார் பதட்டத்துடன் வந்ததார். அவர் போலீசாரிடம் கூறும் போது, கண்ணையும் வாயையும் கட்டி பைக்கில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
போலீசார் உஷாராவது தெரிந்ததும் பூஞ்சேரியில் கொண்டுவந்து விட்டு தப்பிச்சென்று விட்டனர். அவர்கள் யார்? எதற்காக என்னை கடத்தினார்கள் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.
ஜெயக்குமார் முண்ணுக்கு பின் முரணாக சந்தேகத்திற்கிடமாக தகவல் தெரிவித்து வருவதால் அவர் மீதும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் விவகாரம் அல்லது கடன் பிரச்சனை ஏதும் உள்ளதா? கடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் மாமல்லபுரம் கோவளம் சாலை பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






