என் மலர்
செய்திகள்

மின்சாரம் தாக்கி அங்காடி ஊழியர் பலி
வீட்டில் மின்சார பல்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி அங்காடி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே சித்தமல்லி மணவெளி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் சென்னையில் உள்ள கூட்டுறவு அங்காடியில் எடையாளராக வேலை செய்து வந்தார்.
இவர் தீபாவளி விடுமுறைக்காக சித்தமல்லிக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் மின்சார பல்பை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். உடன் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






