என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளர்ப்பு பிராணிகள் சிகிச்சைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி
    X

    வளர்ப்பு பிராணிகள் சிகிச்சைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் வசதி

    வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கால்நடைகளுக்கு உரிய மருத்துவ உதவியினை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் ஜெகதீசன் கூறியதாவது:-

    கால்நடைகள் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்காக அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த 2015 செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.

    கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தின் கண்காணிப்பில் அம்மா ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    வளர்ப்பு பிராணிகள் மற்றும் கால்நடைகள் உடல் நலக்குறைவு மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கால்நடைகளுக்கு உரிய மருத்துவ உதவியினை பெறலாம்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 2 ஆம்புலன்சுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்போர், விவசாயிகள் உள்ளிட்டோர் பெரிதும் பயனடைவர். மேலும் சாலைகளில் அடிபட்டு அவதிப்படும் கால்நடைகளுக்கும் இந்த ஆம்புலன்ஸ் திட்டம் பெரிதும் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×