என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள பெரியகாட்டுக்குறிச்சியை சேர்ந்த 16 வயதுடைய அரசு பள்ளி மாணவி சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்.
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி அழகம்மாள். இவர்களது மகள் சூர்யா (19) அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சூர்யா பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.






