என் மலர்
செய்திகள்

தாம்பரத்தில் கணவர் வீட்டு முன்பு பெண் 3-வது நாளாக தர்ணா
தாம்பரத்தில் கணவர் வீட்டு முன்பு அமர்ந்து பெண் இன்று 3-வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தினார்.
தாம்பரம்:
மேற்கு தாம்பரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அபிப் முகமது (33). அவரது மனைவி நஸ்ரீன் (24). சைதாப்பேட்டையை சேர்ந்த இவருக்கும் அபிப் முகமதுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
நஸ்ரினுக்கு 2 முறை கரு கலைந்தது. அதை தொடர்ந்து நஸ்ரினுடன் வாழ அபிப் முகமது மறுத்து விட்டார். அதை தொடர்ந்து சமாதான பேச்சு நடத்தியும் நஸ்ரினை அவர் ஏற்கவில்லை.
இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் கணவர் அபிப் முகமது வீட்டுக்கு நஸ்ரின் வந்தார். அவரை பார்த்ததும் கதவை பூட்டி விட்டு அபிப் முகமது வெளியே சென்று விட்டார்.
ஆனால் நஸ்ரின் அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்ததும் மகளிர் போலீசார் விரைந்து வந்து அவருடன் சமரச பேச்சு நடத்தினார்கள். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.
கணவருடன் சேர்த்து வையுங்கள். கட்டாயப்படுத்தி அழைத்து சென்றால் தற்கொலை செய்வேன் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் தன்னை சேர்த்துக்கொள்ளும் வரை போராட்டம் நடத்த போவதாக கூறினார்.
மேற்கு தாம்பரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அபிப் முகமது (33). அவரது மனைவி நஸ்ரீன் (24). சைதாப்பேட்டையை சேர்ந்த இவருக்கும் அபிப் முகமதுவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
நஸ்ரினுக்கு 2 முறை கரு கலைந்தது. அதை தொடர்ந்து நஸ்ரினுடன் வாழ அபிப் முகமது மறுத்து விட்டார். அதை தொடர்ந்து சமாதான பேச்சு நடத்தியும் நஸ்ரினை அவர் ஏற்கவில்லை.
இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் கணவர் அபிப் முகமது வீட்டுக்கு நஸ்ரின் வந்தார். அவரை பார்த்ததும் கதவை பூட்டி விட்டு அபிப் முகமது வெளியே சென்று விட்டார்.
ஆனால் நஸ்ரின் அவரது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்ததும் மகளிர் போலீசார் விரைந்து வந்து அவருடன் சமரச பேச்சு நடத்தினார்கள். ஆனால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.
கணவருடன் சேர்த்து வையுங்கள். கட்டாயப்படுத்தி அழைத்து சென்றால் தற்கொலை செய்வேன் என தெரிவித்தார். இந்த நிலையில் இன்றும் 3-வது நாளாக அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் தன்னை சேர்த்துக்கொள்ளும் வரை போராட்டம் நடத்த போவதாக கூறினார்.
Next Story






