என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகை அருகே தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த சாரம்பாடி புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது30). தொழிலாளி. இவரது மனைவி மேகலா(26). திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் இதற்கு முன்பு அக்கரைப்பேட்டை அருகே திடீர் குப்பத்தில் வசித்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டதால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் இந்த வீடு ராசியில்லை என்று கருதி புதிய நம்பியார் நகருக்கு குடிவந்துள்ளனர்.
இந்நிலையில் செல்வம் இந்த வீடும் ராசியில்லை. எனவே வேறு வீட்டிற்கு செல்வோம் என்று கூறியதால் கணவன்-மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 31-ந்தேதி மேகலா தனது குழந்தையுடன் ஒரு துக்கத்திற்கு சென்று விட்டாராம். பின்னர் அவர் வீடு திரும்பியபோது செல்வம் வீட்டில் தூக்குபோட்டு இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வெளிப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்