என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலேசிய தொழிலதிபர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை கொள்ளை
    X

    மலேசிய தொழிலதிபர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை கொள்ளை

    மலேசிய தொழிலதிபர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அரசர்குளம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நயினா முகமது (வயது 50). இவர் மலேசியா நாட்டில் தொழில் செய்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார்.

    இதன் காரணமாக அரசர்குளத்தில் உள்ள அவரது வீடு காலியாக உள்ளது. அவரது வீட்டின் பராமரிப்பு பணிக்காக ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தினமும் நயினா முகமது வீட்டிற்கு சென்று பராமரிப்பு பணி செய்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பராமரிப்பு பணிக்காக ஊழியர் வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும்.

    இது குறித்து நாகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×