என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவர் கைது
வேதாரண்யம் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது தோப்புதுறை-பெரியகுத்தகை சாலை சந்திப்பில் உள்ள மாந்தோப்பில் அனுமதி பெறாமல் மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தவரை பிடித்து அவரிடமிருந்த 5 பாட்டில்களை கைப்பற்றினர். விசாரணையில் அவர் நெய்விளக்கு கீழக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சங்கர் (30) என தெரிய வந்தது. அவரை கைது செய்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Next Story






