என் மலர்
செய்திகள்

அடையாறில் போலீஸ் விரட்டியபோது ஆற்றில் குதித்து ரவுடி தப்பி ஓட்டம்
அடையாறில் போலீஸ் விரட்டியபோது ஆற்றில் குதித்து ரவுடி தப்பியோடி சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர்:
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சுதாகர் (36). இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்.
இவர் நேற்று மாலை 5.30 மணி அளவில் அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோட்டூர்புரம் போலீசார் சுதாகரை பிடிக்க முயன்றனர்.
போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற அவரை போலீசாரும் பின்னால் துரத்திச் சென்றனர்.
அடையாறு திரு.வி.க. பாலம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு சுதாகர் ஓட்டம் பிடித்தார். போலீசாரும் விரட்டினர். இதனையடுத்து சுதாகர் அடையாறு ஆற்றில் குதித்தார்.
பின்னர் சிறிது தூரம் தண்ணீரில் நீந்திச் சென்ற அவர் மேடான பகுதி சென்றடைந்தார். அங்கிருந்து மீண்டும் ஓட்டம் பிடித்து ஆற்றின் மறுமுனையில் கரையேறி தப்பிச் சென்றார். ஆனால் இதனை போலீசார் முதலில் கண்டுபிடிக்கவில்லை.
சுதாகர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரில் இறங்கி சுதாகரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னரே, சுதாகர் கரையேறி தப்பிச் சென்றது தெரிய வந்தது. தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் சுதாகர் (36). இவர் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்.
இவர் நேற்று மாலை 5.30 மணி அளவில் அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கோட்டூர்புரம் போலீசார் சுதாகரை பிடிக்க முயன்றனர்.
போலீஸ் பிடியில் இருந்து தப்புவதற்காக சுதாகர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற அவரை போலீசாரும் பின்னால் துரத்திச் சென்றனர்.
அடையாறு திரு.வி.க. பாலம் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு சுதாகர் ஓட்டம் பிடித்தார். போலீசாரும் விரட்டினர். இதனையடுத்து சுதாகர் அடையாறு ஆற்றில் குதித்தார்.
பின்னர் சிறிது தூரம் தண்ணீரில் நீந்திச் சென்ற அவர் மேடான பகுதி சென்றடைந்தார். அங்கிருந்து மீண்டும் ஓட்டம் பிடித்து ஆற்றின் மறுமுனையில் கரையேறி தப்பிச் சென்றார். ஆனால் இதனை போலீசார் முதலில் கண்டுபிடிக்கவில்லை.
சுதாகர் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரில் இறங்கி சுதாகரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் பின்னரே, சுதாகர் கரையேறி தப்பிச் சென்றது தெரிய வந்தது. தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.
Next Story






